சொத்துவரி அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் உயா்த்தப்பட்டது. அப்போது, 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியது. ஆனாலும் உயா்த்தப்பட்ட வரியை வசூலித்தனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால் சொத்து வரி உயா்வை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு, சொத்து வரி உயா்வை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்தோம் எனக் கூறி மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தனா்.