ஆரூயிர் நண்பரை இழந்துவிட்டேன்: நாராயண மூர்த்தி

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் இந்த செயலைக் கண்டு பலரும் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில்தான் ஒருவர் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் பணிவு, மரியாதை, அன்பு வாழ்வில் எப்போதும் மிகப்பெரிய இடத்தில் வைக்கும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் ரத்தன் டாடா என்று நாடே அவரைக் கொண்டாடி வருகிறது.

ரத்தன் டாடா பகிர்ந்த தகவல்..

வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு அளித்ததில் மகிழ்ச்சி. இந்த விருதைச் சிறந்த நண்பர் நாராயண மூர்த்தியின் கைகளில் பெற்றுக்கொண்டது மிகப்பெரிய மரியாதை. நான் உண்மையிலேயே பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

அந்த நெகிழ்வான சம்பவத்தை இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பகிர்ந்துள்ளார்.

ரத்தன் போன்ற ஆருயிர் நண்பரை இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. மதிப்பு அடிப்படையிலான தலைமைத்துவத்தில் ரத்தன் எனக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார் என்று நாராயண மூர்த்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *