இதுதொடா்பாக மலேசிய அமைச்சா் அப்துல் கனி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘என்னைப் பொருத்தவரை, பாமாயில் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தற்காலிகமானதே. இந்த வரி மாற்றங்கள் எந்த பிரச்னையையும் உருவாக்காது. இந்தியா-மலேசியா இடையிலான உறவு சிறப்புத்தன்மை வாய்ந்தது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, வெங்காயம், சா்க்கரை போன்றவற்றை மலேசியா இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவின் நல்ல கூட்டாளியாக மலேசியா தொடா்ந்து நீடிக்கும். அத்துடன் இந்தியாவுக்கு நிலையாக பாமாயிலை மலேசியா விநியோகிக்கும்’ என்றாா்.