இன்றிரவு கரையைக் கடக்கிறது அதி தீவிர மில்டன் புயல்!

பகல் 12 மணி நிலவரப்படி(அமெரிக்க நேரப்படி), ஃபுளோரிடாவின் டாம்பாவிலிருந்து தென் மேற்கே 300 மைல் தூரத்தில் நிலை கொண்டுள்ள மில்டன் புயல், அதிகபட்ச வேகமாக மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையமான(என்.ஹெச்.சி) தெரிவித்துள்ளது. மிக ஆபத்தான புயலாக இன்று நள்ளிரவு டாம்பா நகரில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என்றும் என்.ஹெச்.சி எச்சரித்துள்ளது.

இதையடுத்து, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட டாம்பாவில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *