எகிறிய ரஞ்சித்தை எப்படி சமாளித்தார் ரவீந்தர்? என்ன நடந்தது?

சரி இன்றைய நாளில் நிகழ்ந்த சுவாரசியங்களைக் காண்போம்..

ப்ரோமோவில் காட்டப்பட்டதை போன்றே.. ரவீந்தருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே கடுமையான சண்டை உண்டானது. வாய்ச் சண்டை மோதலாக மாற, பெண் போட்டியாளர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

இவர்களுக்கிடையேயான சண்டையில் அருண் பிரசாத் தடுமாறி கீழே விழுந்துவிட்டு அடிபட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

இதைத்தொடர்ந்து, இச்சம்பவம்தான் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களின் இன்றைய தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. அவர்களுக்குள் நடத்திய ஆலோசனையின்படி, ரஞ்சித்தையும் ரவீந்தரையும் மன்னிப்பு கேட்க வைத்து நட்பாக பழக வைக்க முடிவெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *