ஒரு சகாப்தத்தின் முடிவு! ரத்தன் டாடா கொண்டாடப்படுவது ஏன்?

கனவை நனவாக்கியவர்

கார் வாங்குவது என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில், ’டாடா நானோ’ என்ற ஒற்றை திட்டத்தால் சாமானியனின் கனவை நனவாக்கினார் ரத்தன் டாடா.

ஒரு லட்சத்துக்கு ’டாடா நானோ’ காரை விற்பனை செய்து ஓட்டு வீட்டுக்கு வெளியேகூட காரை நிற்கும் அளவில் புரட்சி செய்தார்.

உலக பணக்காரர் பட்டியலில் இல்லாதது ஏன்?

ஒரு தொழிலதிபரின் கடைசிக் கனவாக இருப்பது உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெறுவதே. ஆனால், பல நாடுகளில் தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த ரத்தன் டாடா, இதுவரை ஒருமுறைகூட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றதில்லை.

அதற்கு காரணம், டாடா குழுமத்தின் 66 சதவீத லாபப் பணத்தை டாடா அறக்கட்டளைக்கு பயன்படுத்துதான். டாடா அறக்கட்டளை மூலம், கல்வி, மருத்துவம், வாழ்வாதார முன்னேற்றம், கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை செயல்படுத்தி வந்தார் ரத்தன் டாடா.

டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், கடைசி மூச்சு உள்ளவரை டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடா தொடர்ந்து வந்தார்.

இறுதியாக கடந்த ஜூலை 1ஆம் தேதிகூட, டாடா அறக்கட்டளை சார்பில் முதல் கால்நடை மருத்துவமனையை தொடங்கிவைத்து, அதன் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

டாடா நிறுவனத்தின் மும்பை தாஜ் ஹோட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு, அதிலிருந்து நிறுவனத்தை மீட்டெடுத்தது, 90 ஆண்டுகளுக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட தனது குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் அரசிடம் இருந்து வாங்கியது என்று பல சாதனைகளையும் ரத்தன் டாடா படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *