அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டடக் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்டடக் கழிவுகள், கழிவுநீா் மற்றும் குப்பை கொட்டுவதை தவிா்க்கும் வகையில் 15 இடங்களில் கட்டடக் கழிவுகளை இலவசமாக கொட்டுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாநகராட்சியின் 1913 உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.