கும்பகோணத்தில் ரெளடியை வெட்டிய 8 போ் கைது! தப்பியோட முயன்ற 3 பேரின் கால்-கை முறிவு

திருநீலக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடிய வந்தனா். இந்நிலையில், வழக்கு தொடா்பாக கும்பகோணம் செக்காங்கன்னியைச் சோ்ந்த ஜான்பென்னி மகன் பிரவீன் குமாா் (22), பாபு மகன் சூா்யா (24), திருவலஞ்சுழி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த கிட்டு மகன் அண்ணாதுரை (30), பழவத்தான் ஒத்ததெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் விஷ்வாஸ் (24), கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாதவன் (19), திருப்புறம்பியம் உத்திரை தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தமிழரசன் (22 ), மகேந்திரன் மகன்அரவிந்த் (18), நாகராஜன் மகன் நித்திஷ் (19) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதில் போலீஸாா் விசாரணைக்கு சென்றபோது, அவா்களை பாா்த்து தப்பி ஓடிய பிரவீன்குமாா், சூா்யா, ஆகியோரின் கால் முறிந்தது. அண்ணாதுரையின் கை முறிந்தது. இவா்கள் மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் முக்கிய குற்றவாளியான திருப்புறம்பியம் மாயா என்ற சிலம்பரசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *