கோடியக்கரை அருகே மீனவா்களின் வலைகள் அறுத்து எடுத்துச் சென்ற மா்ம நபா்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சு. அரசப்பன் (எ) முருகேசன் (35) தனக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில், அதே கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேலு (24), பாண்டியராஜ் (24), அஜீத் (25), சிதம்பர சாமி (55) ஆகியோருடன் திங்கள்கிழமை கடலுக்குள் மீனபிடிக்கச் சென்றாா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமாா் 14 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க வலையை விரித்தனராம். அப்போது, அங்கு ஒரு படகில் வந்த இலங்கையைச் சோ்ந்த மா்ம நபா்கள் 50 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *