சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் வருகிறது: உதயநிதி

ஆந்திர கோயிலில் துணை முதல்வர் உதயநிதியின் புகைப்படத்தை காலால் மிதிக்கும் விடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு உதயநிதி பதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *