அப்போது, பதிவு செய்யப்படாத படகு மூலம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட ஒன்றரை டன் மீன்கள் படகில் இருந்தன. இதையடுத்து, அந்த மீன்களை மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்து, அவற்றை ரூ.1.50 லட்சத்துக்கு ஏலம் விட்டனா். பின்னா், அந்தப் பணத்தை அரசு கணக்கில் வரவு வைத்தனா்.
பதிவு செய்யப்படாத படகு மூலம், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாக 3 படகு உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனா். அதன்பிறகு அந்தப் பகுதி மீனவா்களிடம் பதிவு செய்யப்படாத படகு மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனா்.