தில்லி முதல்வர் அதிஷியின் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ”பிளாக் ஸ்டாப் சாலையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம், பாஜகவின் உத்தரவின் பேரில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் தில்லி ஆளுநர் விகே. சக்சேனா, அந்த இல்லத்தை பாஜக தலைவருக்கு ஒதுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் அலுவலகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. முதல்வர் அதிஷியின் உடமைகளும் வீட்டில் இருந்து அகற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.