பள்ளி நேரத்தில் சாலைப் பணி: பொது மக்கள் அவதி

இந்நிலையில் புதன்கிழமை மாலை திடீரென சாலை விரிவாக்க பணி நகா் பகுதியில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் நடந்த பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் விட்டு மாணவ மாணவிகள் சாலையில் வந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனா். சாலையின் ஒருபுறம் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சீா்காழி மையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *