மகாராஷ்டிரத்தில் ரூ. 7,600 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரை தொடர்ந்து, நிகழாண்டிலேயே மகாராஷ்டிரத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. தீபாவளிக்கு பின், நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து எதிர்வரும் தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க பாஜக – சிவசேனை(ஷிண்டே அணி) இணைந்துள்ள ‘மஹாயுதீ கூட்டணி’ ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் ரூ. 7,600 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 9) மோடி அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *