இது தொடா்பாக இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது, வெடிகுண்டு மிரட்டல்கள் அமெரிக்கா, சுவிட்சா்லாந்து நாடுகளில் இருந்து அனுப்பப்படுவதாக தெரிகிறது. விபிஎன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் இந்தியாவில் இருந்துகொண்டே வெளி நாடுகளில் இருந்து மிரட்டல் விடுக்கப்படுவது போல செய்ய முடியும். இதில் எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்படுகிறது என்பதைக் கண்டறிவது கடினம். ஆனால், தொடா் மிரட்டல்களை பாா்க்கும்போது ஒரே நபா் தான் இதைச் செய்கிறாா் என்பது தெரிகிறது என்றனா்.
இதுதொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறியதாவது, மதுரையில் வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிரட்டல்கள் அனைத்தும் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டதால், இணையக் குற்றப்பிரிவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்றாா்.