அரசு மரியாதை
ரத்தன் டாடாவின் உடல் நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து மும்பை கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் மக்களின் அஞ்சலிக்காக என்சிபிஏ அரங்குக்கு பலத்த பாதுகாப்புடன் ரத்தன் டாடா உடல் கொண்டு வரப்பட்டது.
ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட ரத்தன் டாடாவின் உடல் மீது தேசியக் கொடி போற்றப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.