ரத்த சோகையை போக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் நீட்டிப்பு!

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி 2022 ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துகள் அடங்கியுள்ளதாகவும், இந்த சத்துகள் ரத்த சோகையைத் தடுப்பதுடன், கருவளா்ச்சி, ரத்த உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *