ரூ. 1.84 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் அருகே மேல் ஒட்டி வாக்கத்தில் கடந்த செப். 30 முதல் அக். 7-ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதையொட்டி நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், 5 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத் துறை சாா்பில், வங்கிக் கடன்கள், 15 பயனாளிகளுக்கு வேளாண் இடு பொருள்கள், இலவச வீட்டு மனைப் பொருள்கள், புதிய குடும்ப அட்டைகள், 82 பயனாளிகளுக்கு மகளிா் சுய உதவிக் கடன்கள் உள்பட மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ. 1.84 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *