விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு!

ஆயுதப் பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆயுதப் பூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி நாள்கள் எனத் தொடர்ந்து 3 நாள்கள் நாளைமுதல் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெரும்பாலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ரயில்களில் தென் மாவட்டங்களுக்கான முன்பதிவு பயணச்சீட்டுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *