அப்போது, மாநாடு நடைபெறும் பகுதியான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த தோ்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்த விவரங்களை புஸ்ஸி ஆனந்திடம் எஸ்பி. தீபக் சிவாச் கேட்டறிந்தாா். அப்போது ஏடிஎஸ்பி திருமால், தவெக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை, விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்பி. தீபக் சிவாச் மற்றும் காவல் உயரதிகாரிகள் வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறும் நாளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களை எந்தப் பாதையில் மாற்றி அனுப்பி வைப்பது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.