வாழப்பாடி அருகே பால் வேன் மோதி ரயில்வே ஊழியர் பலி

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பால் வேன் மோதி ரயில்வே ஊழியர் வியாழக்கிழமை பலியானார்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (57). இவர் பெரியகிருஷ்ணாபுரம் ரயில்வேகேட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழக்கிழமை காலை பணி முடிந்ததும், அவரது இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி வழியாக பேளூர் சாலையில் அனுப்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேளூர் பகுதியில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த பால் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *