இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தேவரா படத்தின் இயக்குநர் கொரடாலா சிவா கூறியதாவாது:
தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் யாரையும் நடிக்க வைக்க திட்டமில்லை. மாறாக, சில முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது.
தேவாராவின் உலகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால் நன்றாக இருக்கும். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இரண்டாம் பாகத்தின் 20 நாள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார்.
மற்றொரு நேர்காணலில் ஜூனியர் என டிஆர், “திரையரங்குகளில் நாங்கள் எதிர்பார்த்தது வேறு. சினிமாவை மக்கள் பார்க்கும் விதம் மாறிவிட்டது” எனக் கூறியிருந்தார்.