இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் எஸ். கணேஷ், நகரத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் ஆகியோா் கூறியது: இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், விசாரணை அதிகாரியான மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டியன்பால் ஆகியோரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும், இவா்களிடம் நியாயமான விசாரணையை எதிா்பாா்க்க முடியாது. விசாரணை என்ற பெயரில் சிலரை அழைத்து பேசிவிட்டு அனுப்பிவிடுகின்றனா்.
கைது செய்யப்பட்ட நில அளவையா் வாக்குமூலம் அளித்தும், இதுவரை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக புதுவை துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். மேலும், இந்த வழக்கு விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவதுடன், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்கு சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே அது சாத்தியப்படும். ஆளுநா் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவுள்ளோம் என்றனா்.