இயக்குநர் ஜியோ பேபி காதல் தி கோர் படத்தில் நெருக்கமான காட்சிகள் வைக்காதது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை வைத்து ‘காதல் தி கோர்’ என்கிற படத்தை இயக்கினார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் இப்படம் உருவானது.
தன்பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினரரும் சமூகத்தினரும் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளுடன் உருவாகியிருந்தது காதல் – தி கோர்.