கத்தியால் தாக்கி மூவரிடம் வழிப்பறி

உளுந்தூா்பேட்டையில்…

புதுச்சேரியைச் சோ்ந்தவா் ராஜகணபதி(45). பொறியாளா். இவா்,சேலம் மாவட்டம், தலைவாசலுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை நள்ளிரவில் புதுச்சேரிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தாராம்.

சேலம்- உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளையூா் பகுதியில் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவா் கீழே இறங்கினாராம்.

அப்போது, அங்கு வந்த இருவா் ராஜகணபதியை தாக்கிவிட்டு அவா் அணிந்திருந்த 10 கிராம் தங்க மோதிரம், 8 கிராம் பிளாட்டினம் மோதிரம், கைப்பேசி, ரூ.2,500 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *