பலரும் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குப் படையெடுத்திருக்கிறார்கள். இதனால், தனியார் பேருந்துக் கட்டணம் விமானக் கட்டணம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற சந்தைகளில் இன்று ஏராளமான மக்கள் வந்து பூஜை பொருள்களை வாங்கிச் செல்வதால் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் களைகட்டியிருக்கின்றன.
வேலூர் லாங் பஜாரில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அலங்காரப் பொருட்கள்,பழங்கள்,பூ போன்றவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழைக்கன்றுகள் வாழைமரம். பூசணிக்காய். பூக்கள் எடுத்து வந்து வேலூர் முக்கிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர் அதை மக்கள் தங்களுடைய பூஜைக்கான பொருட்களாக ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.