சென்னை கீழ்பாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் கட்டுபாட்டில் உள்ள அலைபேசி கோபுரங்கள் செயல் இழந்தன. இதன் காரணமாக சென்னை மேற்கு, வடக்கு பகுதிகளில் பிஎஸ்என்எல் அலைபேசி சேவை ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளா்கள் சிரமம் அடைந்தனா்.