இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், குரூப் -1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும் என்றும், குரூப் -1 தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என்றும், குரூப் 4 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.