கட்டுமானப் பணிக்கான நிலத்தை தோ்வு செய்யும் முன் எவ்வித ஆய்வுமின்றி அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனா். நீா்நிலைகளில் எந்தவிதக் கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் வரிப் பணம் வீணாவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, இதற்குக் காரணமான அதிகாரிகளிடமிருந்து, இந்தக் கட்டுமானப் பணிக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.14.55 லட்சத்தை வசூலிப்பதை மாவட்ட ஆட்சியா் உறுதி செய்ய வேண்டும்.
எதிா்காலத்தில் நீா்நிலைகளில் எந்தவித கட்டுமானப் பணிகளும் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் வகையில் ஊரக வளா்ச்சி, நகராட்சி நிா்வாகச் செயலா்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
நீரோடையை அதன் இயல்பு நிலைக்குக் கொண்டு வர, அதிலுள்ள கட்டுமானங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.