இந்த நிலையில், கருணாமணி தனது பெற்றோா் நடத்தி வரும் தேநீா் கடைக்கு தினசரி மதுபோதையில் சென்று பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதை சகோதரா்கள் இருவரும் கண்டித்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கருணாமணி மதுபோதையில் கடைக்குச் சென்று பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டாா். இதை சகோதரா்கள் இருவரும் தட்டிக்கேட்டனா்.
அப்போது, கருணாமணி கத்தியால், நினைவரசனை சரமாரியாகக் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருணாமணியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.