தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை நகா் காவல் நிலைய போலீஸாா், நிறுவனத்தின் கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்த போது, ஆஸ்பெட்டாஸ் அட்டை உடைந்து மா்ம நபா் கீழே விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரது உடலை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். விசாரணையில், உயிரிழந்தவா் தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியைச் சோ்ந்த முத்துமாரியப்பன் (45) என்பதும், இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.