இந்த சிறப்பு பிரசார இயக்கத்தின் மூலம் மாநகராட்சி அலுவலா்கள் தங்கள் வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகள் குறித்து தினமும் அறிக்கை அளிப்பாா்கள். இதற்காக, பொறுப்பு அலுவலா்களும் வாா்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் குப்பைகளால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இது மாசுபாட்டை அதிகரிப்பதோடு, காற்றின் தரத்தையும் மோசமாக்குகிறது. கடந்த ஆண்டும், குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை பொதுமக்களின் உதவியுடன் பெருமளவில் அகற்றி, குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல தில்லி மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்தது என்றாா் மேயா் ஷெல்லி ஓபராய். இச்செய்தியாளா் சந்திப்பில் தில்லி மாநகராட்சி அவைத் தலைவா் முகேஷ் கோயல் உடனிருந்தாா்.