காஷ்மீர்: 2 ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!

2 ராணுவ வீரர்கள் கடத்தல்

ஜம்மு – காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தீவிர கண்காணிப்பில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிக்குள் இரண்டு ராணுவ வீரர்களை பயங்கரவாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது. அதில், ஒருவர் மட்டும் தப்பி வந்துவிட்டார்.

மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் மற்றொருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *