கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டிலுள்ள பிற பகுதிகளிலும் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்துக்குள் தக்காளி, வெங்காய விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசியத் தலைநகாில் தக்காளி விலை ரூ. 100-க்கும் மேல் விற்பனையான நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும் முயற்சியில் மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் என்.சி.சி.எஃப். மூலம் தக்காளியை விற்க நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து தக்காளி கிலோ ரூ .65-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சந்தையில் விலையைக் குறைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தக்காளி விலையின் பாதிப்பிலிருந்து நுகா்வோரைப் பாதுகாப்பதற்கும், இடைத்தரகா்களின் ஆதாயங்களைத் தடுப்பதற்கும் இந்தத் தலையீடு மேற்கொள்ளப்படுகிறது.