சண்டைக்கு வா! எகிறிய ரஞ்சித்.. ரவீந்தருடன் மோதல்: பிக் பாஸ் 8

புதிய விதிமுறைகள்

இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டு, வீடு இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டு, யாருக்கு எந்தப் பகுதி என்பதை தேர்வு செய்வதிலேயே பிரச்னை தொடங்கியது.

ஒரு வழியாக நிபந்தனைகளுடன் தனி படுக்கைகள் கொண்ட பகுதியை பெண்களுக்காக ஆண்கள் விட்டுக் கொடுத்தனர்.

ஆண்களும், பெண்களும் தங்களின் பகுதிகளுக்கு வரவேண்டும் என்றால் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர்களே கலந்தாலோசித்து முடிவெடுத்தனர்.

இதனிடையெ, ஆண்கள் வீட்டில் இருந்து ஒருவர் பெண்கள் வீட்டுக்கும், பெண்கள் வீட்டில் இருந்து ஒருவர் ஆண்கள் வீட்டுக்கும் தேர்வு செய்து அனுப்புமாறு பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கொடுத்தார்.

இதில், ஆண்கள் ஒன்றிணைந்து முத்துக்குமரனை பெண்கள் வீட்டுக்கு அனுப்ப, பெண்கள் அணியில் யார் செல்வது என்பதை தேர்வு செய்வதில் பிரச்னை தொடங்கியது.

இறுதியில் பவித்ரா ஜனனியை ஆண்கள் வீட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.

இதனிடையே, ஆண்களிடையே சண்டை வராமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக பெண்கள் முணுமுணுத்தது ஆண்களுக்கு கேட்டதோ என்னவோ இன்று மோதல் வெடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *