எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.