இந்த நிதியாண்டில் உச்ச மின் தேவை 270 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 2035ல் இது 446 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆண்டு 2026ல் உச்ச மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும், ஏனெனில் இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 40 ஜிகாவாட் நிறுவப்படுகிறது.
இதில் 10 ஜிகாவாட் அனல் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை 25 முதல் 30 ஜிகாவாட், ஹைட்ரோ மூலம் 3 ஜிகாவாட் மற்றும் 700 மெகாவாட் அணுசக்தி திறன் ஆகியவை அடங்கும்.
மாநிலங்களுடன் கலந்தாலோசித்து மின் பகிர்மானம் உள்ளிட்ட மின்சாரத் துறைக்கான 10 ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது முதலில் தில்லி, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலும், பிறகு மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்படும்.