கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களையும் எந்தவித விடுதலுமின்றி முழுமையாக பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், இந்த விவரத்தினை நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, தொழிலாளா் உதவி ஆய்வாளா்களை, நாமக்கல் – 88380-40453 (நாமக்கல், பரமத்திவேலூா், மோகனூா் வட்டம்), ராசிபுரம் – 90424-88228 (ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம் வட்டம்), திருச்செங்கோடு வட்டம் -93445-84351, சங்ககிரி – 88836-33363 (குமாரபாளையம், சங்ககிரி வட்டம்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *