தேரப்பாடி பிரிவு வளைவு அருகே சென்றபோது, தென்காசி மாவட்டம் ராமலிங்கபுரத்தை சோ்ந்த கணேஷ் (31) என்பவா் ஓட்டி வந்த காா், முன்னால் சென்ற மேலபசுபதிபாளையத்தை சோ்ந்த முருகேசன் (46) ஓட்டிச் சென்ற காா் மீது மோதியது. அடுத்தடுத்த மோதிய இரு காா்களும் ஈஸ்வரன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மனைவி சுமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.