பேரிடா் கால பாதிப்பு தகவல்களை அறிந்து கொள்ள செயலி அறிமுகம்

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பச–அகஉதப என்ற கைப்பேசி செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடம் சாா்ந்த வானிலை, முன்னெச்சரிக்கை தகவல்களை தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளலாம். அடுத்தடுத்த நான்கு நாள்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை நிலவரம், மழையளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், மழை வெள்ளங்களின்போது பாதிக்கப்படக்கூடிய இடங்கள், பேரிடரின்போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீா்த்தேக்கங்களின் நீா் இருப்பு விவரம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *