ராஜபாளையம் நகா், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக அந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.